புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

திறவுகோல்

என்னை எழுத வைத்தவர் 'தமிழர் தகவல்' ஆசிரியர் நண்பர் திரு. திருச்செல்வம். என்னைக் கொண்டு எழுதுவித்தவர் 'வெற்றிமணி' மற்றும் 'சிவத்தமிழ்' ஆகியவற்றின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.
பொதுவாக நான் என்றுமே எழுதுவதில் ஆர்வம் காட்டியவன் அல்ல. எப்படியோ திருச்செல்வத்தின் பார்வையில் பட்ட என்னை 'கனடா வாழ் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், புதிய சூழல், புதிய கலாசாரம், புதிய கல்வி முறை எனப்பல உள்ளனவே அவை பற்றி ஏதாவது எழுதுங்களேன் உபயோகமாக இருக்கும்' என வருந்தி எழுத வைத்தார். அவைகளைத் தொகுத்து இரண்டு நூல்களாகவும் வெளி-யிட்டுள்ளார். என்னை எழுத வைப்பதற்கு அவர் கையாண்ட உத்தி சாம, பேத, தான, தண்டம். 
'தமிழர் தகவல்' வழங்கிய கௌரவத்தினைப் பெறுமுகமாகக் கனடா வந்த சிவகுமாரன் மறைந்த எனது மகன் நினைவாக நான் சிறு-வர்களுக்காக எழுதிவைத்த சிறுகதைகள் சிலவற்றினை எடுத்துக் கொண்டு ஜெர்மனி சென்றார். 'மாறன் மணிக்கதைகள்' என அழகான நூலாக்கி அதனை ரொறன்ரோ எடுத்து வந்து அவனது முதல் ஆண்டு நினைவு நாளன்று வெளியீடு செய்தார். திரும்ப ஜெர்மனி செல்கின்ற போது ஒரு அன்புக் கட்டளையுடன் சென்றார். அவை போன்ற சிறுவர்-களுக்கான சிறுகதைகளை வெற்றிமணியில் பிரசுரிப்பதற்காக எழுது-மாறு வேண்டுகோள் விடுத்தார். அன்புக் கட்டளையை மீற முடிய-வில்லை. முயன்றேன். சில எழுதவும் செய்தேன். அவற்றில் சிலவற்றி-னைத் தொகுத்து எனது மாணவியும் பிரபல எழுத்தாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் 'மாறன் மணிக்கதைகள் -2' எனத் தாயகத்தில் வெளியிட்டுள்ளார்கள். 
சிவகுமாரன் எந்த நேரமும் தனது பத்திரிகை பற்றிய சிந்தனை-யிலேயே இர


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி